யாழ்ப்பாணம், துன்னாலைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து சோதனை நடவடிக்கை - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday 5 August 2017

யாழ்ப்பாணம், துன்னாலைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து சோதனை நடவடிக்கை

யாழ்ப்பாணம், துன்னாலைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று காலை முதல் அந்தப் பகுதியிலுள்ள வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் Nமுற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த காவல்துறையினரின் காவலரன் பொது மக்களால் அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காகவே இன்று காலை அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் இதன்போது கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த


செய்திகள் தெரிவிக்கின்றன

Post Top Ad

Responsive Ads Here