பூநகரி முட்கொம்பன் செக்காலை காட்டுப்பகுதியில் திருட்டுத்தனமாக மரம் வெட்டியவா்கள் வனவள அலுவலரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday 5 August 2017

பூநகரி முட்கொம்பன் செக்காலை காட்டுப்பகுதியில் திருட்டுத்தனமாக மரம் வெட்டியவா்கள் வனவள அலுவலரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிவிலுள்ள முட்கொம்பன் செக்காலை காட்டுப்பகுதியில் திருட்டுத்தனமாக மரங்கள் வெட்டியவா்களை பிடிக்கச்சென்ற  வனவள அலுவலர் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தினால் வெட்டியதுடன்  ஏனைய அலுவலர்களை தாக்கிவிட்டு  தப்பிச் சென்றுள்ளனா்.
குறித்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு இடம்பெற்றுள்ளது
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வனவள திணைக்களத்தின் பூநகரி வட்டார அலுவலகத்தில் இருந்து மேற்படி பிரதேசத்திற்கு  கள விஜயம் மேற்கொண்ட வனவள திணைக்கள பகுதி வன அதிகாரி  மற்றும் அலுவலர்கள் சென்ற போது மரம் அரியும் இயந்திரத்தின் ஒலி  காட்டுப்பகுதியில் கேட்டதனை தொடர்ந்து வனவள அலுவலர்கள் காட்டுக்குள் சென்றுள்ளனா்.
கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் அளவில்  அடர்ந்த பல பெறுமதியான மரங்களை கொண்ட பகுதியில் ஜந்து மேற்பட்டவா்கள்  மூன்று மரம் அரியும் இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக மரங்களை  வெட்டி அவற்றை பலகைகளாக  அறுத்துக்கொண்டிருப்பதனை அவதானித்துள்ளனா்.
இதன் போது கள்ள மரம் கட்டத்தல்காரர்கள்  தப்பிச்செல்ல முற்பட்ட போது அவா்களை  பிடிக்க வன வள அலுவலர்கள் முயற்சித்துள்ளனா்.
இதன்போது ஏற்பட்ட கைகலப்பில்  மரம் வெட்டிய ஒருவா் தான் வைத்திருந்த இயந்திரம் மூலம் அலுவலரின் கையில் வெட்டிவிட்டு இயந்திரத்தையும்  கைவிட்டு தப்பிச் சென்றுள்ளாh்.  ஏனையவா்கள் இயந்திரங்களுடன்  தப்பிச்சென்றுள்ளனா்.
காயமடைந்த வனவள அலுவலா் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிசை பெற்று வருகிறார்.  அத்தோடு இது தொடர்பில்  பூநகரி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவா் ஏற்கனவே நீதிமன்றினால் பிடியாணை பிறபிக்கப்பட்டவா் என வனவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
பூநகரி முட்கொம்பன் பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் முதிரை, பாலை  போன்ற பெறுமதியான நீண்ட காலம் முதிர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. இந்த பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றமை தொடர்பில்  பொது மக்களினால் அனைத்து தரப்பினா்களினதும் கவனத்திற்கும் கொண்டு வரப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post Top Ad

Responsive Ads Here