டெல்லியில் தமிழக விவசாயிகள் உடலில் சேறு பூசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday 6 August 2017

டெல்லியில் தமிழக விவசாயிகள் உடலில் சேறு பூசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

டெல்லியில் தமிழக விவசாயிகள் உடலில் சேறு பூசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம், கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்தின் 21 வது நாளான நேற்று தமிழக விவசாயிகளுடன் இணைந்து புதுச்சேரி விவசாயிகளும் கூட்டுறவு கடன் தள்ளுபடிக்கு கவர்னரின் அனுமதியை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
நேற்று சில விவசாயிகள் தங்களது உடலில் சேறு பூசிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் ஏனைய விவசாயிகளும் சேர்ந்து ஜந்தர்மந்தர் வீதியில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.
ஊருக்கே சோறு போட்ட விவசாயி இன்று பட்டினிக்கு ஆளாகி, சேற்றை அள்ளி முகத்தில் பூசும் நிலைக்கு வந்துவிட்டான் என்பதை வலியுறுத்தவே சேறு பூசி போராடியதாக போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

Post Top Ad

Responsive Ads Here