இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயம் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday 6 August 2017

இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயம்

கிளிநொச்சி, இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த
மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 35, 25, 19 வயதுடையவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகின்றது. இதில் 25 வயதான இளைஞரே மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வாள்வெட்டு சம்பவம் குடும்பத் தகராறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post Top Ad

Responsive Ads Here