அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லையாம் – 12 இளைஞர்கள் அதிரடிப்படையால் கைது - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday 6 August 2017

அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லையாம் – 12 இளைஞர்கள் அதிரடிப்படையால் கைது

யாழ்.கோண்டாவில் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை எனும் குற்றசாட்டில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்ட போது, விசேட அதிரடிப்படையினரே கைது செய்தமையினால் அவர்களின் அனுமதியின்றி விடுவிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்ததாக உறவுகள் தெரிவித்தனர்.

Post Top Ad

Responsive Ads Here