ராகமையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் சிலர் பட்டப்பகலில் வான் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, சினிமா பாணியில் 78 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடவத்தை பகுதியில் உள்ள தனியார் ஆடை விற்பனை நிலையமொன்றுக்கு வான் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆடை விற்பனை நிலையத்தின் வத்தளை கிளையிலிருந்து கடவத்தை கிளைக்கு வான் ஒன்றில் பணம் கொண்டு செல்லப்பட்டபோதே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.